மூடு

வரலாறு

நாகப்பட்டினம் 18.10.1991 அன்று ஒட்டுமொத்த தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. இதுவரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் கொண்ட ஒரு மாவட்டமாக உள்ளது. நாகப்பட்டினம் சோழ மண்டலத்தின் ஒரு அங்கமாக உள்ளது. பண்டைய தமிழ் ராஜ்ஜியங்கள் சோழ மண்டலம் மிகவும் புகழ்பெற்றது .

நாகப்பட்டினம் ஒரு கரையோர நகரம் ஆகும் . இது சோழ குல வள்ளிபட்டினம் என்றும் அறியப்பட்டது. கிமு 3 வது நூற்றாண்டில் பர்மிய வரலாற்று உரையில் இது ஒரு பாரம்பரிய நகரமாக தெளிவு படுத்தப்படுகிறது. அதே உரையில் ஒரு புத்த விஹார் பேரரசர் அசோகரால் கட்டப்பட்டதாகவும் காணப்படுகிறது. சீன யாத்திரிகர் யுவான் சுவாங் மேலும் தனது புத்தகத்தில் புத்த விஹார் பற்றி குறிப்பிட்டுள்ளார். நாகப்பட்டினம் அறிஞர்களின் கூற்றுப்படி பண்டைய புத்த இலக்கியத்தில் ”படரிதித்த” இல் இருந்து மருவி வந்ததாக குறிப்பிட்டுள்ளார்கள் .பண்டைய காலங்களில், நாகநாடு , நாகப்பட்டினம் என்பது மட்டுமே ஸ்ரீ லங்கா வால் குறிப்பிடப்படுகிறது. இலங்கை புத்த துறவிகள் நாகப்பட்டினம் நகரத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டவர்களாவர். பல்லவ ராஜா ராஜசிம்மா [690-728 AD] நாகப்பட்டினத்தில் புத்தர் விகார் உருவாக்க ஒரு சீன ராஜாவை அனுமதித்தார் . ஆகையால், ஒரு சீனரால் கட்டப்பட்ட புத்தர் விஹார் ஒன்று இங்கு உள்ளது.

நாகூர் என்பது நாகர்களின் இல்லமாகும் . அதனால் நாகூர் என்று அழைக்கப்பட்டது . ஆறாம் நூற்றாண்டு வரை இங்கு ஒரு சிவாலயம் இருந்ததாகவும் , அப்பர் , சம்பந்தர் மற்றும் சுந்தரர் இந்த சிவாலயத்துடன் தொடர்பில் இருந்ததாகவும் தெரிகிறது. சௌந்தர்ராஜ பெருமாள் வைஷ்ணவ கோவில் இந்த நகரத்தின் ஒரு முக்கியமான அம்சமாகும் . இந்த சோழ மண்டலம் விஜய நகர அரசர்களால் கொண்டாடப்பட்டது . தஞ்சாவூர் நாயக்கர் காலத்தில் , போர்ச்சுகீசியர்கல் வியாபார தொடர்பு கொண்டுள்ளனர் . அதற்கு பிறகு கிறித்தவர்கள் வியாபார தொடர்பு கொள்ள ஆரம்பித்தனர் . பத்து கிராமங்களை போர்ச்சுகீசியர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் , அதுவே பிறகு வேளாங்கண்ணி பேராலயம் தோன்ற காரணமாக இருந்தது.

1658 ல் டச்சுக்காரர்கள் நாகபட்டினத்தை தங்கள் கட்டுக்குள் போர்ச்சுகீசியர்களிடமிருந்து கொண்டுவந்தார்கள் . இதற்கான ஒப்பந்தம் 15-01-1662 அன்று , தஞ்சாவூர் ல் இருக்கும் ராஜா விஜய நாயக்கர் அவர்களுக்கும் , டச்சு காரர்களுக்கும் இடையில் போடப்பட்டது. இத்திட்டத்தின் அடிப்படையில் பத்து கிராமங்கள் – நாகப்பட்டினம் , புத்தூர் , முட்டம் , பொரவாச்சேரி, அந்தனப்பேட்டை, கருப்பங்காடு , அசுங்கிமங்கலம், சங்கமங்கலம், திருத்தியமங்கலம், மஞ்சக்கொல்லை , நாராயணங்கிடி ஆகியவை போர்த்துகீசியர்களிடமிருந்து டச்சுக்கு மாற்றப்பட்டன.

பத்து கிரிஸ்துவ தேவாலயங்கள் மற்றும் ஒரு மருத்துவமனை டச்சுகாரர்களால் கட்டப்பட்டன. அவர்கள் நாகப்பட்டினம் பெயர் கொண்ட நாணயங்கள் வெளியிடப்பட்டு அவை தமிழ் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டதாக தெரிகிறது . நாகப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் டச்சு காரர்களிடம் 30.12.1676 அன்று ஒப்படைக்கப்பட்டன . பிறகு 1781 ல் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டன . மிகப்பெரிய போராட்டத்துக்கு பிறகு 277 கிராமங்கள் கிழக்கு இந்திய கம்பெனியிடம் , நாகூரை தலைமையகமாக கொண்டு ஒப்படைக்கப்பட்டன . 1779 ல் தஞ்சாவூர் மராட்டியர் காலத்தில் , நாகப்பட்டினம் வராகன் மற்றும் நாகப்பட்டினம் சொரணம் என்று பொறிக்கப்பட்ட தங்க நாணயங்கள் புழக்கத்தில் இருந்ததாக அறியப்படுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே நாகப்பட்டினம் வரலாற்றில் அறியப்படுகிறது. இன்று நாகப்பட்டினம் , இந்த மாவட்டத்தின் தலைநகரமாக உள்ளது .